Friday, 14 November 2014

சொர்க்கம்

வாழும் பொழுதே சொர்க்கத்தை கண்டேன்

என் குழந்தையின் சிரிப்பில்

என் வாழ்வின் அர்த்தத்தை காண்பேன்

   அவளின் வெற்றியில்

கைபேசி


உலகையே அடிமையாக்கிய ஒரு

செயற்கை சாத்தான்

Wednesday, 4 April 2012

கண்ணீர்

உனக்காக உயிரையும் கொடுக்க துணிந்தாள்
அவள் உயிராக நீ இருப்பாய் என்று நினைத்து
உன் கண்ணீர் கண்ட நிமிடம் உயிரை விட்டாள்
அவளுக்கு உயிர் கொடுப்பாயா தோழனே?...

Saturday, 31 March 2012

நம்பிக்கை

அந்த மாலை பொழுதில் கடற்கறை மணலில்
அவன் பதித்த காலடிச் சுவடில் நடந்து சென்றேன்
என்றென்றும் என் வழி துணையாகவும் வாழ்க்கை துணையாகவும்
அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில்

Friday, 30 March 2012

மனதை தொலைத்தேன்

எனக்கென பிறந்தவனை
என் கண் முன் கண்ட தருணம்
என் மனதை தொலைத்தேன்
எனக்கே தெரியாமல்

Friday, 15 April 2011

கனவு

கனவு காண் இளைஞனே
கனவு கண்டால் மட்டும் போதுமா?!...

உழைப்பால் உன் கனவுக்கு உயிர் கொடு
பொறுமை புன்னகையால் உன் கனவுக்கு வண்ணம் தீட்டு
தன்னம்பிக்கை விடாமுயற்சியால் தடைகளை தகர்த்தெரி
நேர்மையால் உன் கனவை மெருகேற்று
வெற்றி கனி உன் கையில் கிடைக்கும் தருணம்
வண்ணமயமான வாழ்க்கை
அந்த கடவுளால் உனக்கு பரிசளிக்கப்படும்

Saturday, 9 April 2011

மனசாட்சி

மனிதனின் நிஜ முகத்தை
அவனுக்கு மட்டுமே பிரதிபலிக்கும்
ஒரே கண்ணாடி அவன் மனசாட்சி மட்டுமே...